Monday, April 29, 2024
Home » ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கமல்ஹாசன், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கமல்ஹாசன், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்

by Suresh

ஒடிசா: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன், சல்மான்கான், அக்ஷய் குமார், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் சிக்கி சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்;

* “கமல்ஹாசன்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்.

* சல்மான்கான்: விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமாக உள்ளது, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவன், இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பங்களை பாதுகாத்து வலிமை கொடுக்க வேண்டும்.

* அக்ஷய்குமார்: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தின் காட்சிகளைக் காணும் போது நெஞ்சம் பதறுகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது எண்ணங்களும், அனுதாபங்களும். ஓம் சாந்தி

* சிரஞ்சீவி: ஒரிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து மற்றும் பெரும் உயிர் இழப்புகள் அதிர்ச்சி.
உயிர்களைக் காப்பாற்ற இரத்தப் பிரிவுகளுக்கான அவசரத் தேவை இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். உயிர்காக்கும் இரத்த அலகுகளை தானம் செய்வதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு எங்கள் ரசிகர்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள நல்ல சமாரியர்கள் அனைவருக்கும் வேண்டுகோள்.

* ஜூனியர் என்டிஆர்: சோகமான ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த அழிவுகரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் பலமும் ஆதரவும் அவர்களைச் சூழ்ந்திருக்கட்டும்” என இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi