ஒடிசா : ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழுவிடம் காணொலி மூலம் ரயில் விபத்து நிலவரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு சம்பவம் நடந்த ஒடிசா மாநிலம் பாலசோர் சென்றுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு ஒடிசா சென்றுள்ளனர். பாலசோர் மாவட்டம் பாகநாகாவில் ரயில் விபத்து நடந்த விபத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.