திருப்பூர், ஏப். 29: திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கைகாட்டிபுதூரில் வாசுதேவன் (40) என்பவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அதிகாலை, மர்ம நபர் ஒருவர் இவரது அலுவலகத்தின் பூட்டை உடைத்து, சுமார் 20 பவுன் நகைகள், ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றார். இது குறித்து வாசுதேவன் அவிநாசி போலீசில் புகாரளித்தார்.
இதனையடுத்து, அவிநாசி டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (35) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து சொக்கலிங்கத்தை கைது செய்த அவிநாசி போலீசார், அவரிடம் இருந்து 20 பவுன் நகை, ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.