புவனேஸ்வர்: ஒடிசாவில் பா.ஜ, பிஜூ ஜனதா தளம் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்தது. இருகட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.ஒடிசாவில் முதல்வர் நவீன்பட்நாயக் தலைமையிலான பிஜூஜனதா தளம் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
147 சட்டப்பேரவை தொகுதிகள், 21 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பா.ஜ மற்றும் பிஜூஜனதாதளம் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதால் இருகட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக நேற்று முறைப்படி அறிவித்தன.