மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியில் சேர்ந்த பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தண்டனை வழங்கியது குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தெற்கு தினாஜ்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில பெண்கள் பாஜக-வில் இணைந்துள்ளனர். அவர்களை திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீண்டும் தங்கள் கட்சிக்கு வருமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.
மேலும், அவர்களை ஒரு சாலையில் பல முறை விழுந்து வணங்கி சொல்லி நூதன தண்டனை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட தூரத்திற்கு அவர்களை இவ்வாறு செய்துள்ளனர். இந்நிலையில் சாலையில் விழுந்து வாங்கிய தூரத்தை அளவிடுவதற்காக கையில் சிறிய குச்சியை வைத்து அளவெடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.