புதுடெல்லி: கண்டம் தாண்டி இலக்குகளை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் – அக்னி பிரைம் ஏவுகணை ஒடிசாவின் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சோதனை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம், ஒன்றிய ராணுவம் இணைந்து, 1,000 முதல் 2,000 கிமீ தூரம் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டன. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.