புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் 3.6 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு உடனே திறந்து விட வேண்டுமென வலியுறுத்தினர். இதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு கோரிக்கையையும் கேட்ட ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் கூட்டத்தை முடித்து வைத்தார்.