சென்னை: வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருவதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வரும் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் அதிகளவிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 40% குறைவாக பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.