ஊட்டி: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் ஊட்டியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் அருகே அவரது வாகனம் மற்றும் அவருடன் வந்த அனைத்து வாகனங்களையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆனால், இந்த சோதனையின் போது, கணக்கில் வராத பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ கிடைக்கப் பெறவில்லை.நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர் சிவராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக தொண்டர்கள் நின்றிருந்தார்கள். அப்போது, அவ்வழியாக வந்த தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிமுகவினர் கூட்டமாக நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்தார்கள். இதைத்தொடர்ந்து, வீடியோ பதிவுடன் அதிமுக அலுவலகத்திற்குள் சென்ற பறக்கும் படையினர் பணம் ஏதேனும் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர். அங்கிருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு சென்றனர்.
நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை
previous post