நெய்வேலி: நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிரான பாமகவினரின் போராட்டத்தின் போது நடந்த கல்வீச்சில் 6 செய்தியாளர்கள் காயம் அடைந்துள்ளனர். நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக நடந்த போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வந்தது. போராட்டத்தின் போது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நிலைமையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.