நெல்லை: நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கில் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு காலதாமதமாக நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்ததால் ஐகோர்ட் மதுரை கிளை அபராதம் விதித்தது. அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்கக் கோரி தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரோகிணி வழக்கு தொடர்ந்திருந்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார்.