நெல்லை: நெல்லை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கியதாலோ, மகனுக்கு சீட் தராததாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், யார் கொடுத்த அழுத்தத்தால் இதுபோன்ற செய்தி அவதூறாக பரப்பப்படுகிறது என தெரியவில்லை. தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணி குறித்து திமுக தலைவர் பல்வேறு முடிவுகளை எடுக்கலாம். இந்தியா கூட்டணி அமைவதற்கு பிதாமகனே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று கூறினார்.