நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களுக்கு பண உதவி செய்துள்ளாரா என சோதனை நடத்தப்படுகிறது.