சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த வழங்கப்பட்ட அவகாசம் பிப்.1 வரை நீட்டிக்கபட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு முதல்வர் வழிகாட்டுதல்படி கூடுதல் கால நீட்டிப்பு வழங்கபட்டுள்ளது. ஜன.2 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் பிப்.1 வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னாக அறிவித்துள்ளார்.