Sunday, June 16, 2024
Home » 4 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது விசாரணை குழுவை அமைத்தது இலங்கை

4 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது விசாரணை குழுவை அமைத்தது இலங்கை

by Karthik Yash

கொழும்பு: இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்ததாக கைதான 4 ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து விசாரிக்க விசாரணை குழுவை இலங்கை அமைத்துள்ளது. ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து, இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தும் திட்டத்துடன் கொழும்பில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்களை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கடந்த 19ம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைதான 4 பேர் குறித்து விசாரிக்க இலங்கையின் மூத்த டிஐஜி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து ஐஜி தேஷபாண்டு தன்னாகோன் நேற்று உத்தரவிட்டார். இந்திய அதிகாரிகளுடன் இணைந்து அக்குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

You may also like

Leave a Comment

13 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi