டெல்லி : முன்னாள் பிரதமர் நேருவைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். பொதுத்துறையை உருவாக்கிய நேருவைப் பற்றி பொதுத்துறை நிறுவனத்தை தாரைவார்த்த மோடி பேசக்கூடாது என்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களையும் மோடி விமர்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.