புதுடெல்லி: ஒன்றிய அரசின் தேசிய உரங்கள் நிறுவன தலைவர் மற்றும் இயக்குநராக யு.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தில் ரசாயனத்துறையில் பொறியாளர் படிப்பும், சென்னை பல்கலைக் கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம்(எம்பிஏ) படிப்பும் முடித்துள்ள யு.சரவணன் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உரத்தொழில் நிறுவனங்களில் 33 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உடையவர். இவரது நியமனம் ஜூன் 16 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.