நெல்லை: நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியின் படிப்பு தடைபடாமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் சாதிய பாகுபாட்டால் வெட்டப்பட்ட மாணவரை சந்தித்த பின் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்தார். நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் தங்கம் தென்னரசு கூறினார்.