சென்னை: நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 32 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்துள்ளேன்; மகளுடன் இருப்பதற்காக லண்டன் செல்ல பாஸ்போர்ட் கோரினேன். கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தும் இதுவரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்று மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். காவல்துறை சரிபார்ப்பு முடிந்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.