மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களோடு இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் கடைசியில் உயர்ந்து நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்து 71,595 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எஸ்பிஐ பங்கு 3.5%, சன் ஃபார்மா, ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் தலா 2%, ஆக்சிஸ் வங்கிப் பங்கு 1% விலை உயர்ந்தன. டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்லே, ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் தலா ஒரு சதவீதம் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எம் & எம் பங்கு 2.4%, பார்த்தி ஏர்டெல், என்டிபிசி பங்குகள் தலா 1.8%, டாடா ஸ்டீல் பங்கு 1.6% விலை குறைந்து கைமாறின. இன்போசிஸ், JSW ஸ்டீல், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, எச்டிஎஃப்சி வங்கி பங்குகளும் விலை குறைத்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65 புள்ளிகள் அதிகரித்து 21,782 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.