நெல்லை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு வினாடிக்கு 300 கனஅடியில் இருந்து 1,300 கன அடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நோக்கி உயர்ந்த வருவதால் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை தாண்டியுள்ள நிலையில் நீர்வரத்து 1,230 கன அடியாக உள்ளது.