மதுரை: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வதுசுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது. 23 மரங்களை வெட்டுவது உட்பட, பேபி அணையை, பழுதுபார்க்கவும் மற்றும் பலப்படுத்தவும் அனுமதி வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.