சென்னை : முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அணை கட்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான கேரளாவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று கூறிய அவர், தமிழர் நலனுக்கு எதிரான கேரளாவின் சதியை புரிந்து கொண்டு கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றார்.