Monday, May 13, 2024
Home » எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த த்தமிழ்செல்வி, ராஜசேகர் பச்சை அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த த்தமிழ்செல்வி, ராஜசேகர் பச்சை அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து

by MuthuKumar

சென்னை: உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டை சார்ந்த முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோர் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியை சேர்ந்த என்.முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டை சார்ந்த முதல் பெண் ஆவார். கடந்த 23ம் தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார்.

முத்தமிழ்செல்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 28.03.2023 அன்று வழங்கினார்.
மேலும், தன்னார்வ அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.மேலும், சென்னை கோவளம், மீனவ கிராமத்தை சார்ந்த ராஜசேகர் பச்சை (28) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்திய அலைசறுக்கு வீரரான இவர் சென்னை-படூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் மே 19ம் தேதி காலை 5.30 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோர் நேற்று சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி, இதுபோன்று மென்மேலும் பல சாதனைகளை படைத்திட வாழ்த்து தெரிவித்தார். மேலும், விளையாட்டு துறையில் இதுபோன்று ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் விளங்க வேண்டும் என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

13 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi