தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருக்காக கட்சி நிர்வாகிகள் பலர் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சவுமியா அன்புமணிக்கு உதவியாக அவரது இளைய மகள் சஞ்சுத்ரா, வாக்கு சேர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பாப்பாரப்பட்டி பிக்கிலி கொல்லப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சஞ்சுத்ரா நேற்று பிரசாரத்துக்கு சென்றார், அப்போது கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் (70) என்பவர் சஞ்சுத்ராவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். அப்போது அப்பெண் சஞ்சுத்ரா மற்றும் ஓட்டு கேட்டு வந்த பாமக நிர்வாகிகளுக்கு நெற்றியில் திலகமிட்டார். இதனை பார்த்த சஞ்சுத்ரா ஆரத்தி எடுத்த சின்னம்மாளுக்கும், பொட்டு வைத்து அழகு பார்த்தார்.