மதுரை: குரங்குகள் சேதப்படுத்திய பயிர்களை வனத்துறை, தோட்டக்கலைத்துறை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். முசிறியைச் சேர்ந்த தாயுமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பப்பாளி, கொய்யா, வாழைகளை குரங்குகள் சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. குரங்குகள் ஏற்படுத்திய சேதத்தை நீதிமன்றத்தால் கண்டறிய முடியாது வனத்துறை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.