Tuesday, May 14, 2024
Home » சிஏஜி அறிக்கையை போஸ்டராக ஒட்டிய காங்கிரஸ்: மோடி அரசு ரூ7.5 லட்சம் கோடி ஊழல்

சிஏஜி அறிக்கையை போஸ்டராக ஒட்டிய காங்கிரஸ்: மோடி அரசு ரூ7.5 லட்சம் கோடி ஊழல்

by Neethimaan

திண்டுக்கல்: பாஜ அரசு ரூ7.5 லட்சம் கோடி மெகா ஊழல் செய்ததாக கூறி, சிஏஜி தணிக்கை குழு அறிக்கையை திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டராக ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று பாஜவின் ஊழல் பட்டியலை அம்பலப்படுத்திய சிஏஜி தணிக்கை குழு அறிக்கையை நகர் முழுவதும் பல இடங்களில் போஸ்டராக ஒட்டியுள்ளனர். அதில், துவாரகா விரைவு பாதை ஒரு கிலோ மீட்டருக்கு திட்ட செலவான ரூ18 கோடியில் இருந்து ரூ250 கோடி செலவழிக்கப்பட்டது ஏன்? ரூ14.56 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி ஊழல்,

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் ரூ132 கோடி வசூல், பாரத் மாலா திட்டம் ஏலம் விடுதலில் ஊழல், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்ட பயணம் விளம்பரங்களுக்கு செலவழிக்கப்பட்டது, ரூ5 லட்சம் கோடி பங்குச்சந்தை ஊழல், ரூ4.5 லட்சம் கோடி 5ஜி அலைக்கற்றை ஊழல் என மோடி அரசின் மெகா ஊழல் ரூ7.5 லட்சம் கோடி ஊழல் என்பது உள்ளிட்ட சிஏஜி தணிக்கை குழு அறிக்கை இடம் பெற்றிருந்தது.

You may also like

Leave a Comment

eighteen + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi