எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காயல்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
சிறுபான்மையினர்களுக்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்திலேயே எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்கள் நமது எம்பிக்கள். சிறுபான்மையினருக்கு எதுவும் ெசய்யாத எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். மோடி பிரதமராக இருப்பதால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் அண்ணாமலை, பொய்களையே அதிகம் சொல்கிறார். தமிழகம், புதுச்சேரி, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் 99% வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.