பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 4வது தெருவை சேர்ந்தவர் சாமுவேல் (30). இவர் லாரி டிரைவர். நேற்றிரவு 10 மணியளவில் வேலை முடித்து வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்தியிருந்தார். இந்த நிலையில், பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதால் சாமுவேல் வந்து பார்த்தார்.
அப்போது பைக் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தது. அந்த பகுதி மக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். இருப்பினும் பைக் எரிந்து நாசமானது. இதுகுறித்து சாமுவேல் கொடுத்த புகாரின்படி, எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.