சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவைச் சேர்ந்தவர் எட்வர்ட் ராஜதுரை (47). பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர், பாஜ சிறுபான்மை அணி முன்னாள் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். சாத்தான்குளத்தில் எட்வர்ட் அன் கோ என்ற பெயரில் சமூக வலைதள குழு நடத்தி வந்தார். இந்த குழுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து நேற்று முன்தினம் ஆடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்து எட்வர்ட் ராஜதுரையை கைது செய்தனர்.
அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பாஜ முன்னாள் கவுன்சிலர் கைது
previous post