டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜி யை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது சரியானது. அமலாக்கத்துறை வேண்டுமானால் உயர்நீதிமன்றத்தை முறையிடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆட்கொணர்வு மனுவை தொடர்வது தேவையற்றது என உயர்நீதிமன்றமும் கருதியுள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் சட்டத்தை முழுமையாக அறிந்தே செயல்படுகிறது என நம்புகிறோம்: உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.