சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்காக 6,000 கனஅடி நீர் திறக்கபட்டுள்ளது. ஏற்கனவே 600 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் வினாடிக்கு 6,000 கனஅடி நீர் கூடுதலாக வெளியேற்றப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கபட்டது.