சென்னை: மேகாலயா தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெறும் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ளார். 30 ஆண்டுக்கு மேலாக நீதித்துறையில் ஒரு சகாப்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துகள் என்று முதல்வர் கூறினார்.