Sunday, May 19, 2024
Home » குட்டிக் குட்டி மருத்துவக் குறிப்புகள்

குட்டிக் குட்டி மருத்துவக் குறிப்புகள்

by Porselvi

* சேற்றுப்புண்ணுக்கு கடுக்காயை அரைத்து தடவி வர குணம் தெரியும்.
* பல்வலி குணமாக ஒரு வெற்றிலை, இரண்டு கிராம்பு சேர்த்து மென்று வலியுள்ள பல்லில் ஒதுக்கி வைத்துக் கொண்டால் குணமாகும்.
*வாய் நாற்றம் போக வெந்நீரில் எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
*வாய்ப் புண் குணமாக சிறிது உப்பு கலந்த மோரினை வாயில் சிறிது நேரம் வைத்துக் கொண்டு துப்ப வேண்டும். ஒரு வாரம் இப்படி செய்ய வாய்ப் புண் குணமாகும்.
*இருமல் குணமாக துளசிச்சாறு தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட குணமாகும்.
*வயிற்றுவலி நீங்க நீரில் சிறிது சுக்கு, பனங்கற்கண்டு கொதிக்க வைத்து சாப்பிட வேண்டும்.
*மலச்சிக்கல் குணமாக இரவு தூங்குவதற்கு முன் இரண்டு பேரீச்சம்பழம், ஆறு உலர் திராட்சைப் பழம் நீரில் இரவு போட்டு வைத்து, காலையில் நீருடன் பருக வேண்டும்.
*வாயுக் கோளாறு நீங்க மிளகைப் பொடி செய்து பெருங்காயத்தூள் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து 1 டீஸ்பூன் சாப்பிடலாம்.
*தலைவலி குணமாக மிளகுப்பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
*தலைச்சுற்றல் நிற்க பச்சை இஞ்சிச் சாறு, தேன் கலந்து ெதாடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
*தலை பாரம் குறைய நல்லெண்ணெயில் தும்பைப் பூவைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர குணமாகும்.
*இரத்த அழுத்தம் கட்டுப்பட காலை, மாலை இரு வேளையும் ½ மூடி எலுமிச்சம் பழச் சாறு 2 அவுன்ஸ் எடுத்து வெந்நீரில் சேர்த்து 2 தேக்கரண்டி தேனுடன் சாப்பிட்டு வர வேண்டும்.
*தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலம் பெறும்.
*கண் பார்வை தெளிவாக துளசியை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.
*தொப்பைக் குறைய சுரைக்காயை வாரம் 2 முறை சாப்பிட வேண்டும்.
*பருக்கள் மறைய ஜாதிக்காய்,சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவ குணமாகும்.
*தொண்டை கரகரப்பு நீங்க சிறிது புழுங்கல் அரிசியுடன் 10 மிளகு சேர்த்து வாயில் அடக்கி, சாற்றினை உறிஞ்சினால் குணமாகும்.
*இரத்த மூலத்திற்கு வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வரலாம்.
*காய்ச்சலுடனான வாந்தி நிற்க துளசிச்சாறு கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
– எஸ். விஜயலஷ்மி,

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi