டெல்லி :மக்களவை தேர்தல் தொடர்பாக மதிமுக நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.