Monday, May 6, 2024
Home » திருமண கோலத்தில் தேர்வெழுதிய மாணவி

திருமண கோலத்தில் தேர்வெழுதிய மாணவி

by MuthuKumar

திருவாரூர்: திருவாரூர் சித்தாநல்லூரை சேர்ந்த திருஞானம்-தீபா தம்பதி மகள் மதுமிதா(22). சேந்தமங்கலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் படித்து வரும் இவருக்கும், நாகை மாவட்டம் மேலஓதியத்தூரை சேர்ந்த ஈஸ்வரன்-இந்திரா தம்பதி மகன் பத்மநாபன்(28) என்பவருக்கும் திருவாரூர் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

இந்நிலையில் மதுமிதாவுக்கு இறுதி செமஸ்டருக்கான தேர்வு நேற்று நடந்தது. இதனால் நேற்று காலை தனக்கு திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் அவசர அவசரமாக காரில் கணவருடன் கல்லூரிக்கு சென்றார். பின்னர் சக மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில் தேர்வை எழுதினார். தேர்வு முடிந்தவுடன் மதுமிதா, அவரது கணவர் பத்மநாபனை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

4 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi