சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார். பாஜக எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைப்பது ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு இல்லை என்பதால் மக்கள் மீது நம்பிக்கை வைத்தே தேர்தலை எதிர்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.