டெல்லி: மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியது இந்திய தாயை கொன்றதற்கு சமம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நாங்கள் மணிப்பூர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினோம். மணிப்பூர் தொடர்பான எங்களது நிலைப்பாட்டில் உறுதியோடு உள்ளோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே பிரதமருக்கு தெரியவில்லை; அவர் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. மணிப்பூரில் பற்றி எரியும் தீயை அணைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.