டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரணமணியம் பங்கேற்றுள்ளார்.
காவிரியில் உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியறுத்தி உள்ளது. மேகதாது விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை 53 டிஎம்சி தர வேண்டிய கர்நாடகம் தற்போது வரை 15 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில், நீர்வரத்து எவ்வாறு உள்ளது, கர்நாடக அணைகளில் நீர்வரத்து எவ்வாறுஉள்ளது, நீர் வெளியேற்றம், நீர் இருப்பு ஆகியவை குறித்து விவாதிக்கபடும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தண்ணீர் திறந்து விடவில்லை என்ற குற்றசாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் கர்நாடக அரசு காவிரியில், 26.3 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாடிற்கு திறந்து விடவேண்டும், ஆனால் 3.78 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. எஞ்சிய 22.54 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும். அதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதி 13 நாட்கள் ஆன நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட அதன் தலைவர் சவுமித்ர குமார் ஹல்தர் அழைப்பு விடுத்துள்ளார்.