டெல்லி: மணிப்பூர் மாநில மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி போராடுவோம். மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர போர்கால நடவடிக்கை தேவை. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாஜக அரசு மற்றும் பிரதமரின் மௌனம் மன்னிக்க முடியாதது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்திருக்கிறார்.