இம்பால்: அசாம் ரைபிள் படைப் பிரிவை மணிப்பூரிலிருந்து நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மணிப்பூர் பா.ஜ.க நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர். மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி நடந்த பழங்குடியினர் ஒற்றுமை யாத்திரையில் வன்முறை வெடித்தது. இதனால், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இனக் கலவரத்தால் பாதித்துள்ள மணிப்பூரில் இருந்து துணை ராணுவப் படையினரைத் திரும்ப பெற வலியுறுத்தி, இம்பால் மேற்கு மாவட்டத்தின் ஹோடாம் லெய்ராக், குவாகீதெல் மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் அங்கோம் லெய்காய், குராய் பகுதிகளில் பெண்கள் கடந்த திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பிஷ்னுபூர்-காங்க்வாய் சாலையில் மொய்ராங் லாம்காய் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் இருந்து அசாம் ரைபிள் படையினர் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் அசாம் ரைபிள் படைப் பிரிவை மணிப்பூரிலிருந்து நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மணிப்பூர் பா.ஜ.க நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர். மத்தியப் பாதுகாப்புப் படைக்கு எதிராக பிரதமர் மோடிக்கு மணிப்பூர் பா.ஜ.க நிர்வாகிகள்! கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.