Tuesday, May 28, 2024
Home » மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை நடைதிறப்பு

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை நடைதிறப்பு

by Karthik Yash

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டலகால பூஜைகள் தொடங்கின. வழக்கம்போலவே இந்த வருடமும் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பல நாட்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு போதிய வசதிகள் செய்யப்படாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் பின்னர் இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. இத்துடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடைந்தது.
மகரவிளக்கு பூஜைகளுக்காக நாளை (30ம் தேதி) மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 15ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. 20ம் தேதி காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த மண்டல காலத்தில் 33.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். கோயில் மொத்த வருமானம் ரூ.241.71 கோடி.

You may also like

Leave a Comment

16 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi