சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக சென்னையில் முக்கிய பொது போக்குவரத்தான மின்சார ரயில் சேவை, பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (40149), தாம்பரம் – சென்னை கடற்கரை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (40150) இன்று (மார்ச் 13) முதல் 16ம் தேதி வரையிலும், 18 முதல் 23ம் தேதி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை பீச் to தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (40419), தாம்பரம் to சென்னை பீச்-க்கு இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (40420) 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.