சென்னை: மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னணி பாடகர் வேல்முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சாலையில் இருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை இயக்க முயன்ற வேல்முருகனுக்கும், உதவிமேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.