Friday, May 17, 2024
Home » திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்து உத்தரவு!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்து உத்தரவு!

by Francis

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை புகாரில் திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளர் மகுடீஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இவரது மனைவி செல்வராணி புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய வந்துள்ளேன் எனக்கூறி மதுபோதையில் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக பெண் புகார் அளித்துள்ளார். கட்சியின் உறுப்பினராக உள்ள மகுடீஸ்வரனை நீக்குமாறு அண்ணாமலையை கேட்டுக் கொள்கிறேன் என திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், காலை உணவுத் திட்ட பெண் பணியாளரிடம் மதுபோதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மகுடீஸ்வரனின் பதவியை பறித்து கட்சி மாவட்ட தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கட்சி மாவட்ட தலைவர் அறிக்கையில் கூறியதாவது; திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பார்வையாளரும், மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் என்பவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறேன்.

எனவே பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அவரிடம் கட்சி சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்துகொள்ள வேண்டாம் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிக்கும்படி மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கேட்டுக் கொள்கிறேன். என்று கூறப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi