மதுரை: மதுரை மேலூரில் உள்ள ஐயப்பன் கோயிலை அகற்றக் கோரிய வழக்கில் ஆட்சியர், நகராட்சி ஆணையர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. அழகர் கோயில் சாலையில் அரசு பொது பாதையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளதாக பூசாரி கோபிநாத் வழக்கு தொடர்ந்தார். விநாயகர் கோயில் பூசாரி தொடர்ந்த வழக்கில் மதுரை ஆட்சியர், மேலூர் நகராட்சி ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.