சென்னை: 2022ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூக மேம்பாட்டுக்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி இளமையில் தந்தை பெரியாரின் உதவியாளராக திகழ்ந்தவர்.