மதுரை: மதுரை மாநகர் பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் சக்திவேல் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். செல்லூரை சேர்ந்த மருதுபாண்டி, ரஞ்சித்குமார், குறிஞ்சி நகரை சேர்ந்த தென்னரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கே.புதூரை சேர்ந்த அகிலன், சுந்தராஜன்பட்டியை சேர்ந்த ஆகாஷ் ஆகியோரையும் அண்ணாநகர் போலீஸ் கைது செய்தது.