Thursday, May 16, 2024
Home » மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

by Neethimaan
Published: Last Updated on

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தனியார் பேருந்தில் கல்லூரிக்கு படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணித்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறு நாகலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. கண்டெய்னர் லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஓவர்டேக் செய்யும்போது, லாரி மீது உரசி விபத்து ஏற்பட்டது.

பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மேலும் காயமடைந்த 5க்கும் மேற்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரஞ்சித் உயிரிழந்தனர்.

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த 4 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi