Wednesday, May 15, 2024
Home » தகாத உறவுக்கு இடையூறு காதலியின் கணவரை வெட்டி கொன்ற காதலன்: ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி

தகாத உறவுக்கு இடையூறு காதலியின் கணவரை வெட்டி கொன்ற காதலன்: ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி

by Ranjith

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த முதுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் துர்கேஷ்(25). கூலி தொழிலாளியான இவருக்கு சோனியா (22) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். சோனியாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த நடராஜ் (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த துர்கேஷ், தகாத உறவை கைவிடும்படி, மனைவி மற்றும் நடராஜை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களின் உறவு நீடித்து வந்துள்ளது.

இதனால் இருவரையும் எச்சரித்ததோடு மனைவியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், துர்கேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு சோனியாவும் சம்மதிக்க, நேற்று அதிகாலை 1.30 மணி அளவில், நடராஜ், தனது சித்தப்பா மகன் மது (22) என்பவருடன், துர்கேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது சோனியா கதவை திறந்து வைத்ததால் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிகொண்டிருந்த துர்கேசை, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். துர்கேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடராஜ் மற்றும் மதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi